சூடுபிடிக்கும் பாதிரியார் பெனடிக் ஆன்றோ வழக்கு

Date:

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பாத்திமா நகரில் வசித்து வந்தவர் பெனடிக் ஆன்றோ. பாதிரியாரான இவர் மீது பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் 18 வயதாக நர்ஸிங் மாணவி ஒருவர் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் ஆன்றோ தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக மிரட்டலும் விடுத்தார் எனக் கூறியிருந்தார்.

இந்தப் புகாரை தொடர்ந்து பாதிரியார் பெனடிக் ஆன்றோ தலைமறைவானார். தொடர்ந்து அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதற்கிடையில் பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவின. தொடர்ந்து பாதிரியார் ஆன்றோவும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் அவர் மீதான வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....