உளவு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் வடகொரியா

Date:

எதிரிகளைக் கண்காணிப்பதற்கான உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன், அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது மகளுடன் அந்நாட்டு விண்வெளி மேம்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளதாகக் கூறினார்.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இதுபோன்ற உளவு செயற்கைக்கோள்களை அதிகளவில் தயாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், புதிதாக வடிவமைத்துள்ள செயற்கைக்கோளை திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தும்படி கிம் ஜாங் அன் உத்தரவிட்டார்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...