150 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் கலப்பின சூரிய கிரகணம்

Date:

150 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும், முழு அளவிலான கலப்பின சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது.

அத்துடன், 2023ம் ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணமாகவும் இது அமைந்துள்ளது.

வளையம் மற்றும் கங்கன சூரிய கிரணம் இணையும் ஹைபிரிட் எனப்படும் கலப்பின சூரிய கிரகணமாக இன்று தென்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இந்த சூரிய கிரகணமானது இன்றைய தினம் காலை 7.04 முதல் மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது.

முற்பகல் 9.46க்கு சூரிய கிரகணம் உச்ச நிலையை அடையவுள்ளது.

தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, பசுபிக் பெருங்கடல் பகுதி, இந்தியப் பெருங்கடல் பகுதி, அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் வலைய கிரகணம் தென்படவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வட மேற்கு பகுதியில் முழு சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.

எவ்வாறாயினும், இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

சூரியன் மற்றும் பூமிக்கு இடையே சந்திரன் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகின்றது.

அதாவது சூரிய ஒளியை சந்திரன் இடைமறிப்பதால் இந்த சூரிய கிரகணம் உண்டாகிறது.

குறித்த கலப்பு சூரிய கிரகணம் மிகவும் அரிதாக தென்படக்கூடியதாகும்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...