ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர்! 492 ஓட்டங்கள் குவித்த அயர்லாந்து அணி

Date:

அயர்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ஜெய சூர்யா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இலங்கையின் கல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியினர் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினர். இதில் அயர்லாந்து அணியின் ஸ்டிர்லிங், கர்டிஸ் கேம்பர் ஆகியோர் சதமடித்துள்ளனர்.

மேலும் அதிரடியாக ஆடிய அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பிர்னி 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து விக்கெட் கீப்பர் டுக்கர் 80 ஓட்டங்கள் எடுத்து இருந்த நிலையில் விஷ்வா ஃபெர்னாண்டோ பந்தில் போல்ட் ஆனார்.

இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று அயர்லாந்து அணி 492 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

இலங்கை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். விஷ்வா ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி விக்கெட் ஏதும் இழக்காமல் சிறப்பாக விளையாடி வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....