இரண்டு ஆணுறுப்பு..ஷாக்கில் உறைந்த மருத்துவ உலகம்!

Date:

டிஃபாலியா எனப்படும் அரிய மருத்துவ நிலை காரணமாக குழந்தை இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறந்துள்ளது. ஆனால் மலம் கழிக்க ஆசனவாய் இல்லை. இந்த அரிய நிலை ஆறு மில்லியன் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மருத்துவ அறிவியல் வரலாற்றில் டிஃபாலியா தொடர்பாக இதுவரை 100 கேஸ்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. முதன் முதலில் 1609 ஆம் ஆண்டு இப்படியான ஒரு குழந்தை பிறந்ததாக பிரபல மருத்துவ பத்திரிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பாகிஸ்தானில் பிறந்துள்ள குழந்தைக்கு ஒரு ஆண்குறி மற்றொன்றை விட ஒரு சென்டிமீட்டர் நீளமாக இருப்பதாகவும், இரண்டும் சிறுநீர் கழிக்கக்கூடியதாகவும் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஆசனவாய் இல்லாததால், கொலோனோஸ்கோபி மூலம் துளை ஒன்றை உருவாக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அந்த ஆண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களின் குடும்பத்தில் யாருக்கும் பிறப்பு குறைபாடுகள் இருந்ததாக வரலாறு இல்லை.

ஒரு ஆண்குறி 1.5 சென்டிமீட்டர் நீளமும் மற்றொன்று 2.5 சென்டிமீட்டரும் இருந்துள்ளது. சிறுவனுக்கு இரண்டு சிறுநீர்க்குழாய்களுடன் இணைக்கப்பட்ட ஒற்றை சிறுநீர்ப்பை இருந்தது, இரண்டு ஆண்குறிகளிலிருந்தும் சிறுநீரை வெளியேற்ற முடியும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு நாட்கள் சிறுவன் கண்காணிப்பில் இருந்தான். பின்னர் அவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தொடர் ஃபாலோ-அப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....