வங்காளதேசத்தில் வெப்பநிலை உயர்வால் அரிசி உற்பத்தி 40 சதவீதம் குறையும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Date:

காலநிலை மாற்றத்தால் உலகில் தற்போது ஏற்பட்டு வரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று வெப்பநிலை அதிகரிப்பு ஆகும். அதன்படி நம் அண்டை நாடான வங்காளதேசத்திலும் வெப்பநிலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. அதாவது நாட்டின் தலைநகரான டாக்காவில் கடந்த மாத நிலவரப்படி அதிகபட்சமாக 40.6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 4 டிகிரி செல்சியஸ் அதிகம் ஆகும்.

இந்த வெப்பநிலை அதிகரிப்பு குறித்து வங்காளதேசத்தின் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அஜிசுர் ரகுமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளில் இது அதிகபட்ச வெப்பநிலை ஆகும். வருகிற நாட்களில் வெப்ப அலை மீண்டும் உருவாகி நாட்டில் அரிசி உற்பத்தி 40 சதவீதம் வரை குறையலாம். எனவே மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவு பாதுகாப்புக்கு இது மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

3வது தங்கம் வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசிய...

நிஷான்[ Nissan ] கார் நிறுவனத்தின் புதிய தீர்மானம்

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிஷான், மின்சார கார் உற்பத்தியை...

மனைவி கொலை கணவருக்கு மரண தண்டனை !

எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை...

ஹசரங்கவுக்கு பதில் துஷான் ஹேமந்த

வனிந்து ஹசரங்க காயத்தில் இருந்து மீண்டு வருவதால் ஐசிசி கிரிக்கெட் உலகக்...