பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் மீட்பு

Date:

களுத்துறை நகரில் ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடிகளை கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (06) இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மாணவியின் பெற்றோரால் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி நேற்று மதியம் மற்றுமொரு இளம் ஜோடி மற்றும் இளைஞர் ஒருவருடன் தற்காலிக விடுதிக்கு வந்து மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

மாணவியுடன் வந்த மற்றைய ஜோடி, சிறுமியின் சடலம் கிடைப்பதற்கு சற்று முன்னர் விடுதியை விட்டு வெளியேறியதுடன், அவருடன் வந்த இளைஞனும் விடுதி அறையை விட்டு வௌியேறியிருந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் உடலின் பல பாகங்களில் கீறல்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை பிரிவு குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மேற்கொண்டு வருவதுடன், நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் அணி அசத்தல்..!

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது....

3-வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு...

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர்...

5 புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

  ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் 5 புதிய பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஜனாதிபதி...