தனியார் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து

Date:

நெல்லை அருகே ஆட்சிமடம் பகுதியில் தனியார் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இரண்டு வாகனங்களின் டிரைவர்கள் உட்பட 27 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 4 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று முக்காணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ஆட்சிமடம் அருகே வந்த போது, திடீரென பஸ்சின் முன்பக்க டயர் வெடித்ததில் பஸ், எதிரே வந்த வேன் மீது மோதியது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு விருதுநகரில் உள்ள ஒரு கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வழியாக அந்த வேனில் வந்துள்ளனர்.

இந்த நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....