கொலம்பியாவில் பாதுகாப்பு துறை மந்திரியின் வருகைக்கு முன்னர் குண்டுவெடிப்பு

Date:

அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் வடக்கு சான்டாண்டர் மாகாணத்தில் உள்ள திபு நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சென்ற ஜீப் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அந்த ஜீப் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர்.

இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலம்பியாவின் பாதுகாப்பு துறை மந்திரி இவான் வெலாஸ்குவெஸ் திபு நகருக்கு செல்வதற்கு சற்று முன்னர் இந்த தாக்குதல் நடந்திருப்பது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

நாட்டின் மிகப்பெரிய கிளர்ச்சி குழுவான புரட்சிகர ஆயுதப்படையின் அதிருப்தியாளர்களும், தேசிய விடுதலைப்படையினரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...