சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் ஒரு செய்தி

Date:

சுவிட்சர்லாந்து முழுவதும், வீட்டு வாடகைகள் உயர இருப்பதாகவும், அதை எதிர்கொள்ள வாடகை வீடுகளில் வசிப்போர் தயாராக இருக்குமாறும் செய்திகள் வெளியாகிவருகின்றன.

அதற்குக் காரணம், அதிகரித்துவரும் வட்டி வீதங்கள். பெடரல் வீட்டு வசதி அலுவலகம், ‘reference interest rate’ என்னும் ஒரு வட்டி வீதத்தை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில்தான் வீடுகளின் உரிமையாளர்கள் வாடகைகளை நிர்ணயிக்கிறார்கள்.

தற்போது, இந்த வட்டி வீதம் 1.25 சதவிகிதமாக உள்ளது. ஆனால், அது 1.5 சதவிகிதமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி வட்டி வீதம் 1.5 சதவிகிதமாக உயரும் பட்சத்தில், வீட்டு வாடகைகள் சுமார் 3 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பொதுவாக, வீட்டு வாடகை உயர்வு அக்டோபர் மாதத்தில் அமுலுக்கு வரும் என்பதால், வரும் அக்டோபரில் வீட்டு வாடகைகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....