க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவன் பலி

Date:

கும்புக்கன் ஓயாவில் மூழ்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு பொசன் போயா தினத்தன்று உயிரிழந்துள்ளார்.

மொனராகலை றோயல் தேசிய பாடசாலையில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் திரந்த டில்ஷான் என்ற 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த உறவினர்கள் குழுவொன்று இந்த மாணவனின் வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவர்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் நீராடச் சென்றுள்ளனர்.

குறித்த குழுவினர் நீரோடையில் நீந்திக் கொண்டிருந்த போது, ​​பாடசாலை மாணவர் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர் ஆனால் முடியாமல் போயுள்ளது. பின்னர், பிரதேச மக்களின் ஆதரவுடன், இறந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.

இதற்கு முன்னரும் இந்த இடத்தில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...