பிரான்சில் பச்சிளங்குழந்தைகளை தாக்கிய நபர் யார்?

Date:

பிரான்சில் பச்சிளங்குழந்தைகள் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய நபருக்கும் அதே வயதில் குழந்தை ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.

நேற்று, பிரான்சிலுள்ள பிரபல சுற்றுலாத்தலமான Annecy என்னும் ஏரியின் அருகிலுள்ள விளையாட்டுத்திடல் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை ஒருவர் கத்தியால் குத்தத் துவங்க, சிலர் அவரைத் தடுக்க முயன்றுள்ளார்கள். தடுக்க முயன்ற சிலருக்கும் கத்திக் குத்து விழுந்துள்ளது.

ஆகவே, பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டுத்தான் பிடிக்கமுடிந்துள்ளது.

அந்த நபருடைய பெயர் அப்தல்மாசி (Abdalmasih H, 31) என்றும், அவர் சிரியா நாட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

எட்டு குழந்தைகள் குத்தப்பட்டதாக நேற்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில், இன்று நான்கு குழந்தைகள் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் இரண்டு குழந்தைகள், இரண்டு வயதுடையவர்கள், ஒரு குழந்தைக்கு மூன்று வயது, மற்றொரு குழந்தை 22 மாதக் குழந்தை, அது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விடயம் என்னவென்றால், அப்தல்மாசிக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஸ்வீடன் நாட்டவரான பெண் ஒருவரைத் திருமணம் செய்து, ஸ்வீடனில் அகதி நிலை பெற்றுள்ளார் அப்தல்மாசி.

இந்நிலையில், அவரும் அவரது மனைவியும் எட்டு மாதங்களுக்கு முன் பிரிந்துவிட்டிருக்கிறார்கள்.

அப்தல்மாசி பிரான்சில் புகலிடம் கோரியுள்ளார். ஆனால், நான்கு நாட்களுக்கு முன், அவரது புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. பிரான்சில் மட்டுமின்றி, சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலியிலும் அவர் புகலிடம் கோரியுள்ளார்.

மூன்று முறை ஸ்வீடனில் குடியுரிமை கோரியும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், அவர் ஐரோப்பிய தடையில்லா போக்குவரத்து விதிகளின்கீழ் பிரான்ஸ் வந்துள்ளார்.

இதற்கிடையில், அவர் ஏற்கனவே ஸ்வீடனில் புகலிடம் பெற்றிருப்பதால், பிரான்சில் அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin தெரிவித்துள்ளார்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....