கனடாவின் தென்கிழக்கு கடற்பகுதியில் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் கனடா மற்றும் அமெரிக்கா கப்பல்கள் மற்றும் விமானங்கள் என்பன தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
குறித்த கப்பலில் பணியாளர் ஒருவரும் நான்கு சுற்றுலா பயணிகளும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த நீர்மூழ்கி கப்பலுடனான தொடர்பு துண்டிப்படையும் போது அது கடலுக்கு அடியில் இருந்ததா? அல்லது மேலாக இருந்ததா? என்ற தகவல் வெளியாகவில்லை.