யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்திய மீனவர்களின் நான்கு படகுகளையும் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறைக்கு அழைத்துவரப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீனவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.




