8 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி!

Date:

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இன்று (07) இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

2023 ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று சிம்பாப்வேயில் இந்த நாட்களில் நடைபெற்று வருகிறது.

அதன் ஆரம்ப சுற்றில் சிறப்பாக செயற்பட்ட இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை அடைந்ததன் மூலம் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது.

சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை எதிர்கொள்ளும் இறுதிப் போட்டி இன்று (07) இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகா, மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப்பை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களை இழந்து 243 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Keacy Carty அதிகபட்சமாக 87 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சாா்பில் மஹீஸ் தீக்சன 04 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 244 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, பதிலுக்கு களம் இறங்கிய இலங்கை அணி 44.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் பெதும் நிஸ்ஸங்க 113 பந்துகளில் 14 நான்கு ஓட்டங்களுடன் 104 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....