டோனி ஒரு டீசல் எஞ்சினை போன்றவர் – ஏபி டிவில்லியர்ஸ் புகழாரம்

Date:

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையொட்டி தாமதமாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்த நிலையில் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவர் பேட்டிங் செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஐபிஎல் 2023 சீசனின் முடிவில் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2024 சீசனில் விளையாட போகிறேன் என்று அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக என் மீது அன்பை பொழியும் ரசிகர்களுக்கு நான் அளிக்கும் பரிசு இது என்று அப்போது அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கேப்டன் டோனியின் ஓய்வு குறித்து தென் ஆப்ரிக்க அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருது தெரிவித்துள்ளார்.

அதில், இந்த ஐபிஎல் தொடர் தான் டோனியின் கடைசி தொடராக இருக்குமோ? அதை யார் அறிவார். டோனி ஒரு டீசல் எஞ்சினை போன்றவர். அது எப்படி முடிவில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறதோ அப்படியே டோனியும் இருக்கிறார். அவர் என்ன ஒரு அற்புதமான வீரர். என்ன ஒரு அற்புதமான கேப்டன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...