G-20 கூட்டமைப்பின் தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு

Date:

டெல்லியில் நடைபெற்ற G-20 உச்சிமாநாடு நிறைவடைந்தது.

இந்தியா தலைமையில் நடைபெற்ற G-20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான G-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான G-20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் இடம்பெறவுள்ளது.

இந்தியாவிடமிருந்து G-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பெற்றுக்கொண்ட பின் பிரேசில் ஜனாதிபதி  லுலா டா சில்வா தெரிவிக்கையில்,

பிரேசிலின் தலைமையிலான G-20 கூட்டமைப்பு 3 முக்கியத்துவங்களை கொண்டுள்ளது.

1. சமூக ஒன்றிணைப்பு மற்றும் பட்டினிக்கு எதிரான போராட்டம்

2. ஆற்றல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி

3. உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் ஆகியவையாகும்.

‘நியாயமான மற்றும் நிலையான உலகத்தை கட்டமைத்தலே’ பிரேசில் தலைமையிலான G-20 கூட்டமைப்பின் பொன்மொழியாகும். பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணி, காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய அணி திரட்டல் ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...