# Tags

சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமிகள் மாயம்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சிறுமிகள் முல்லைத்தீவு மற்றும் உரும்பிராய் பிரதேசங்களில் வசித்ததாகவும், இந்த சிறுவர் இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக அழைத்து வரப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் […]

இராணுவத்தினரின் குறுக்கே சென்ற இருவர் கைது

நீர்வேலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் ரோந்தில் சென்ற இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர், துவிச்சக்கர வண்டியில் சென்ற இராணுவத்தினருக்கு குறுக்கே நின்று வழிமறித்து,இடையூறு விளைவித்திருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாரினால் பூதர் மடம் மற்றும் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.