# Tags

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதல் : தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு நேற்று (28) வந்த நபர் ரயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த தகவலை அறிந்த பொலிஸார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த நபர் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு […]

பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு சம்பவம் : நான்கு தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்றுள்ளது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிலக்கரி சுரங்கத்தை சுற்றிவளைத்த பயங்கரவாதிகள் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 4 தெர்ழிலாளர்கள சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.