# Tags

பாடசாலை மாணவன் திடீர் மரணம்!

பாணந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் இன்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை வடக்கில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நண்பர்கள் குழுவுடன் விளையாடிக் கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பாடசாலை மாணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை இன்று […]

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் வர்த்தகர் என தகவல்

பாணந்துறை – பின்வத்தை பொது மயானத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்க் கொல்லப்பட்டவர் கடவத்தையைச் சேர்ந்த 56 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வாகனத்தில் காலி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது உயிரிழந்தவர் கடவத்தை, கிரில்லவல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சம்பத் குடகொட என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கடவத்தை நகரில் […]