மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் கட்சிக்கு முன்னோக்கி செல்லும் வழி ஆகியவற்றில் பொதுஜன பெரமுனவின் எவ்வாறு உதவ முடியும் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.