# Tags

ஹரக் கட்டா , குடு சலிந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்

மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட நந்துன் சிந்தக என்ற “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிக என்ற “குடு சலிந்து” ஆகிய இருவரும் இன்று (15) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்கருக்குச் சென்றதுடன், அவர்கள் கென்யா மற்றும் இந்தியா ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளனர். “ஹரக் கட்டா” மற்றும் “குடு சலிந்து” ஆகியோருடன் மேலும் ஆறு பேர் அந்த குழுவில் உள்ளதுடன் […]

ஹரக் கட்டா உட்பட 8 பேர் மடகஸ்கரில் கைது !

போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் நந்துன் சிந்தக (ஹரக் கட்டா) உட்பட 08 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக மடகஸ்கர் பாதுகாப்பு படையினர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின் மனைவி மற்றும் மனைவியின் தந்தையும் அடங்குவதாக கூறப்படுகிறது. சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு பிடியாணைக்கு அமைய ஹரக் கட்டா கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.