பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு சம்பவம் : நான்கு தொழிலாளர்கள் பலி
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்றுள்ளது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிலக்கரி சுரங்கத்தை சுற்றிவளைத்த பயங்கரவாதிகள் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 4 தெர்ழிலாளர்கள சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.