Update: கார்-ரயில் மோதி விபத்து- மேலதிக தகவல்கள் !

Date:

இன்று (16) பிற்பகல் புகையிரதத்துடன் கார் மோதியதில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகல்தொட்ட புகையிரத கடவைக்கு அருகில் கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் கார் மோதியுள்ளது.

விபத்தில் ஒரு ஆணும் பெண்ணும் பலியாகினர்.

காரில் 35 வயதுடைய ஆணும் 80 வயதுடைய பெண்ணொருவரும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் 35 வயதுடைய பேரனும் 80 வயதுடைய பாட்டியும் பயணித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த இருவரும் அஹங்கம பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள் என தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் கராபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...