ஜனாதிபதி ரணிலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Date:

எப்பாவெல பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது முகப்புத்தகத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை (07) தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் சந்தேகநபர் முகப்புத்தகத்தில் பதிவிட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

“ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி ஒருவரைக் கண்டு பிடிக்க முடியுமா? நாட்டை சீரழித்தவர் வருகிறார்” என சந்தேக நபர் பதிவிட்டுள்ளார்.

பதிவு குறித்து உடனடியாக அறிந்து கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் துரிதமாக செயற்பட்டு குறித்த இளைஞனைக் கைது செய்துள்ளனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...