திடீர் ஒவ்வாமையால் மாணவி உயிரிழப்பு

Date:

அதுருகிரிய, பனாகொட பராக்கிரம வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்ற 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் திடீர் ஒவ்வாமை காரணமாக ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஹோமாகம, முல்லேகம பகுதியைச் சேர்ந்த தினிதி திமாரா என்ற பதினான்கு வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (18) காலை பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர், தோழி ஒருவருடன் மாடியில் படித்துக் கொண்டிருந்த போது, ​​“அம்மா கை கொஞ்சம் வலிக்குது” என்று தாயிடம் கூறியுள்ளார்.

 

பின்னர், தா திடீரென வாந்தி எடுத்து தரையில் விழுந்த அவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் ஒருவெல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர் பரிசோதித்த வைத்தியர்கள் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...