நாய்க்குட்டிகளுக்கு இனங்காணப்படாத வைரஸ் பரவல்!

Date:

மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு பரவியதாக அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இந்த நோயின் பரவலாக பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களைத் தவிர கண்டி, கம்பளை, ஹட்டன், பேராதனை, கினிகத்தேன ஆகிய பிரதேசங்களிலும் இந்நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாவட்டங்களில் எட்டு மாதங்களுக்கும் குறைவான நாய்க் குட்டிகளுக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட நாய்க் குட்டிகள் சுவாசக் கோளாறுகள் (சுவாசப் பிரச்சினைகள்), வாந்தி, வயிற்றுப்போக்கு, ஈறுகளின் நிறமாற்றம், பசியின்மை மற்றும் சோம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

ஜெர்மன் ஷெப்பர்ட்ஸ் மற்றும் லெப்ரடார்ஸ் போன்ற கலப்பு இன நாய்களிடையே இந்த தொற்று பரவுவது கண்டறியப்பட்டது.

எனவே நாய் வளர்ப்பவர்கள் நாய்க்குட்டிகளுக்கு உறைந்த உணவுகளை ஊட்டுவதை தவிர்க்குமாறும் 4 அல்லது 5 மாதங்களுக்கு குளிப்பதை தவிர்க்குமாறும் வைத்தியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கூறிய பகுதிகளில் நீண்ட காலமாக இந்த வைரஸ் தொற்று பரவி வந்த நிலையில், தற்போது இந்த வைரஸின் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...