யாழ். வைத்தியசாலையில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

Date:

யாழ். போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெறும் நோயாளர்களை பார்க்க வரும் உறவினர்கள் போதை மாத்திரைகள், மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களை எடுத்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டீ.சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களின் பயணப் பைகளை சோதனையிடுகையிலேயே இவ்வாறு போதைப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வைத்தியசாலைக்குள் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் இப்பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 3 மதுபான போத்தல்கள்;, ஒருதொகை போதைப்பொருள் மற்றும் போதை கலந்த வெற்றிலை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...