வரதட்சணை கேட்டு தினம் தினம் இயற்கைக்கு முரணான பாலியல் உறவு

Date:

கூடுதல் வரதட்சணை கொடுக்காததால் இயற்கைக்கு முரணான பாலியல் உறவுகளில் ஈடுபட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது இளம்பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

குவாலியரில் ஒரு இளம்பெண் தனது கணவர் ரூ.10 லட்சம் பணமும் காரும் கேட்டு, அவை கிடைக்காத கோபத்தில் தன்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார். பெண்ணின் பெற்றோர் கணவருக்கு பலமுறை அறிவுரை கூறித் திருத்த முயற்சித்தும், அவர் புரிந்துகொள்ளவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் கோஞ்ச் ஜலான் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் இறுதியில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் குவாலியர் மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது இயற்கைக்கு மாறான பாலியல் பலாத்காரம் மற்றும் வரதட்சணை கொடுமை வழக்கு சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட 24 வயது இளம்பெண் உத்தரப் பிரதேசத்தில் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, வரதட்சணையாக, தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் இதர பொருட்களுடன், 15 லட்சம் ரூபாயை பெண்ணின் குடும்பத்தினர் தரப்பில் கொடுத்துள்ளனர். இருப்பினும், கூடுதலாக ரூ.10 லட்சம் மற்றும் ஒரு கார் வேண்டும் என கணவரும் மாமியாரும் கேட்க ஆரம்பித்ததால் பிரச்சனை தொடங்கியது.

பாதிக்கப்பட்ட பெண் இந்தக் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்ததால், அவரது கணவர் அவருடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண், தான் தனியாக இருக்கும் போதெல்லாம் மாமனார் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அவருடைய கணவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் நிலைமைக்கு அவரையே குற்றம் சாட்டினார்கள்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...