கொலம்பியாவில் நேற்று (17) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முதலில் குறித்த நிலநடுக்கம் 6.3 ரிச்டர் அளவில் பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிச்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் பொகோட்டா, மெடலின் மற்றும் காலி போன்ற பெரிய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.