கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழாவின் முதலாவது கும்பல் பெரஹெரா இன்று (21) ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், கும்பல் பெரஹரா எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வீதி உலா வர உள்ளது.
பின்னர் 26ஆம் திகதி முதல் ரந்தோலி பெரஹெரா ஆரம்பமாகி 30ஆம் திகதி வரை வீதி உலா வரவுள்ளது.
ஒகஸ்ட் 31 ஆம் திகதி மகாவலி கட்டம்பே படகில் நடைபெறும் நீர் வெட்டு விழாவின் பின்னர் ஊர்வலம் நிறைவடைவுள்ளமை குறிப்பிடத்தக்கது.