20 கோடி மோசடி செய்த தம்பதி!

Date:

20 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கணவன்-மனைவியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 48 மற்றும் 43 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு குரன பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தம்பதி நடத்தும் வர்த்தக நிலையமொன்றில் பெருமளவிலான பணத்தை வைப்பிலிட்ட ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

20 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் வியாபாரம் செய்து வரும் ஒருவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பு குரன பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தம்பதியினால் நடத்தப்பட்ட இந்த நிறுவனத்தில் எவரேனும் பணத்தை முதலீடு செய்திருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...