கனடாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

Date:

கனடாவின் தலைநகர் ஒட்டாவா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இன்பினிட்டி கன்வென்ஷன் சென்டரில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது ஒரு கும்பல் அங்கு புகுந்து துப்பாக்கியால் சுட்டது.

இதனால் அங்கு இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் டொரண்டோவை சேர்ந்த சையத் மொஹமது அலி(வயது 26), அப்திஷாகுர் அப்தி தாஹிர்(36) ஆகிய 2 பேர் பலியானார்கள்.

6 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்ன? இனப்பிரச்சனையில் இந்த சம்பவம் நடைபெற்றதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....