அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Date:

வெல்லம்பிட்டிய சிங்கபுர குளியல் கிணறுக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (04) பிற்பகல் 119 என்ற அவரச அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெல்லம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதோடு,  இறந்தவர் 50 முதல் 55 வயதுக்கு இடைப்பட்ட 05 அடி 03 அங்குல உயரம் கொண்டவர் என்றும், வெள்ளைக் கோடிட்ட  ஊதா நிறத்திலான சட்டையும் கலப்பு நிற சாரமும் அணிந்திருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திடீர் மரண விசாரணையின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....