சீரற்ற காலநிலையால் போக்குவரத்து பாதிப்பு

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் அடை மழை பெய்து வருகிறது. மழையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் நுவரெலியா வீதியிலும் கடும் பனிமூட்டம் காணப்படுவதனால் மலையகத்திற்கான போக்குவரத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் நுவரெலியா மாட்டத்தின் பிரதான வீதிகளில் தற்போது நிலவும் காலநிலையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல, கினிகத்தேனை, கடவல வட்டவளை செனன் உள்ளிட்ட இடங்களிலும் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, தலவாக்கலை, லிந்துலை, ரதல்ல, நானுஓயா உள்ளிட்ட பிரதேசங்களிலும் கடும் பனி மூட்டம் அடிக்கடி காணப்படுவதனால் வாகன போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்தும் போது தமக்கு உரிய பக்கத்தில் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இதே வேளை தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.

எனவே இந்த வீதிகளில் பயணஞ்செய்யும் வாகன சாரதிகள் மிகவும அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....