கட்டார் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நபறொருவரை ஏமாற்றி பணமோசடிசெய்த நபரொருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளினால் கைது செய்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற 06 முறைப்பாடுகளுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளி அடிப்படையில் எப்பாவல, எலதிவுலவ்வெவ பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு முறைப்பாடு செய்த நபர்களிடம் சந்தேகநபர் சுமார் 16 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் ஓய்வுபெற்ற இராணுவ, விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடமும் இவ்வாறு மோசடியாக பணம் பெற்றுகொண்டுள்ளமை விசாரனைகளில் தெரியவந்துள்ளது.
இவறொரு இடைத்தரகர் என்றும் தெரியவந்துள்ளது.