தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை !

Date:

தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் எந்தவொரு இணையப் பரிவர்த்தனைகளுக்கும் உதவவில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று போலியான இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் கடனட்டை மற்றும் வரவட்டைகளின் தகவல்களைப் பெற்று மோசடிகள் இடம்பெற்றுவருவதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமது இணையதளம் இதுபோன்ற எந்த ஒன்லைன் பரிவர்த்தனைக்கும் வசதி செய்யவில்லை என்றும், மோசடி செய்பவர்கள் தங்களது இணையத்தள முகவரியை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் இலங்கை தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட பொதிகளுக்கு சிறிய தொகையை செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட இணையதளம் மூலம் ஒன்லையினில் குறுஞ்செய்தி அனுப்பி இந்த மோசடி இடம்பெறுவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் செயலைச் செய்யும் மோசடியாளர்களுக்கு இரையாகிவிட வேண்டாம் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் தபால் திணைக்களம், இது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடு, விசாரணை அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால் 1950 என்ற அவசர அழைப்பு பிரிவு அல்லது அஞ்சல் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....