யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளில் இன்று (13) தேர்த்திருவிழா இடம்பெற்று வருகின்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை 6.15 அளவில் வசந்த மண்டப பூஜையுடன் தேர்த்திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
நாளை (14) தீர்த்த திருவிழாவுடன் 25 நாட்கள் திருவிழா முடிவடையவுள்ளது.