கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு

Date:

ரத்கம, கிரிமெடிய தகன மேடைக்கு பின்னால் உள்ள கலப்பு பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

ரத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

 

உயிரிழந்தவரின் கை, கால்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

உயிரிழந்தவர் சுமார் 27 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி மாலை பெணிவத்தை கட்டுதம்பே பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நண்பர்கள் குழுவுடன் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

பின்னர் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறியதும் தெரியவந்துள்ளது.

 

அதன்படி நேற்று (18) மாலை அவரது சடலம் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...