இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவுக்கு போக்குவரத்து விதி மீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை – புனே அதிவேக நெடுஞ்சாலையில் ரோஹித் ஷர்மா மணிக்கு 215 கிலோமீற்றர் வேகத்தில் காரை செலுத்தியமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2023 உலக கிண்ணத்தில் பங்களாதேஷ் போட்டிக்கு முன்னதாக ஏனைய இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் இணைவதற்காக புனே செல்லும் வழியிலேயே இடம்பெற்றுள்ளது.
இந்திய அணியின் ஏனைய உறுப்பினர்களுடன் ரோஹித் ஞாயிற்றுக்கிழமை புனே வந்தடைந்தார்.
திங்கட்கிழமை அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் ஓய்வு நாள் என்பதால், மும்பையில் தனது குடும்பத்துடன் ஒருநாள் செலவிட ரோஹித் முடிவு செய்திருக்கலாம்.அதன் காரணமாக அவர் மும்பை சென்று திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.