இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

Date:

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும்.

தென்ஆப்பிரிக்கா இந்தத் தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. இந்தியா, நெதர்லாந்து அணிகளிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ஏழு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்கில் டி காக், மார்கிராம், வான் டெர் டுசன், கிளாசன், மில்லர் வலு சேர்க்கின்றனர். டி காக் களத்தில் நின்று விட்டால் அவரை கட்டுப்படுத்துவது கடினம். இந்த உலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெற இருப்பதால் அணிக்கு எதாவது செய்து விட்டு செல்ல வேண்டும் என நினைப்பார். டி காக் 4 சதங்களும், வான் டெர் டுசன் 2 சதமும், மார்கிராம், கிளாசன் தலா ஒரு சதமும் அடித்துள்ளனர்.

பந்து வீச்சில் ரபாடா, யான்சன், நிகிடி என முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் மகாராஜா, ஷாம்சி உள்ளனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நம்பிக்கையுடன் களம் காண்பார்கள்.

ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டு தோல்வியை சந்தித்த பின், ஏழு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகிய பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். லாபஸ்சேன், சுமித் சதம் அடிக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினால் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்துவது கடினம். வார்னர், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 சதங்களும், டிராவிஸ் ஹெட் ஒரு சதமும் அடித்துள்ளனர்.

பந்து வீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் வேகப்பந்து வீச்சில் அசத்துவார்கள். புதுப்பந்தில் ஸ்டார் மாயாஜாலம் காட்டுவார். அதில் தென்ஆப்பிரிக்கா சிக்கினால் அவ்வளவுதான். சுழற்பந்து வீச்சில் ஆடம் ஜாம்பாதான். இவர் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக திகழ்வார்கள்.

இதனால் இரு பெரிய அணிகள் மோத இருப்பதால் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....