17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6-லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் – பேர்ஸ்டோவ் களமிறங்கினர். 9 ரன்னில் பேர்ஸ்டோவ் நடையை கட்டினார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 2 பவுண்டரி 2 சிக்சர் விளாசி 25 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்னிலும் தவான் 45 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாம் கரண்- ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். யாஸ் தயால் ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசி சாம் கரண் 23 ரன்னில் வெளியேற அடுத்த ஓவரில் ஜிதேஷ் சர்மா 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான் 45 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.