ஐபிஎல் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அபிஷேக் 34 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார். 39 பந்துகளில் இந்த சதத்தை அவர் பதிவு செய்தார்.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஹெட் 4-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் கிறிஸ் கெய்ல் 30 பந்தில் விளாசினார். 2-வது மற்றும் 3-வது இடங்கள் முறையே யூசப் பதான் 37 பந்திலும், டேவிட் மில்லர் 38 பந்திலும் சதம் விளாசினர். இவர்களுக்கு அடுத்தபடியாக டிராவிஸ் ஹெட் 39 பந்தில் 4-வது இடத்தில் உள்ளார்.