30 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுவன்

Date:

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் அருகில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அதே துணிக்கடையில் குடும்ப வறுமை காரணமாக 15 வயது சிறுவன் ஒருவனும் வேலை செய்து வந்துள்ளான். இதனிடையே சிறுவனும், அப்பெண்யும் கடையில் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். மேலும் சிறுவன் அப்பெண்ணை அக்கா என்று அழைத்ததால் உடன் பணிபுரிபவர்களுக்கு பெரிதாக சந்தேகம் ஏற்படவில்லை.

இதனிடையே இருவரும் வெவ்வேறு காரணங்களை கூறி அவ்வபோது ஒரே நாளில் விடுப்பு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் இருவரையும் கண்காணிக்கத் தொடங்கினர். அவர்களது சந்தேகம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினரிடம் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்ப உறுப்பினர்கள் சிறுவனை கண்டித்துள்ளனர்.

ஆனாலும், சிறுவனும், அப்பெண்ணும் தங்களுக்கு இடையேயான உறவை நிறுத்திக் கொள்வதாக தெரியவில்லை. குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் சுதாரித்துக் கொண்ட இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி சிறுவனும், அப்பெண்ணும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது உறவினர்கள் சிறுவனை மீட்டனர். இதனை பார்த்த அப்பெண் அச்சத்தில் உடனடியாக மாயமானார்.

இது தொடர்பாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் குழந்தைகள் அமைப்பு சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. 18 வயது பூர்த்தி அடையாத சிறுவனை அப்பெண் அழைத்துச் சென்றதால் பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...