சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்…

Date:

சென்னையில் நாளை (அக்டோபர் 15ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்விநியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

அந்த வகையில் நாளை (அக்டோபர் 15ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் நாளைய மின்தடை பகுதிகள்: கும்மிடிப்பூண்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் கங்கன்தொட்டி ஏஸ், ஆர்.கே.நகர் எஸ்.ஏ.கோயில், திலகர் நகர், ஆர்.கே.நகர், எல்லைமுதலி, கல்மண்டபம், தொண்டியார்பேட்டை, ஆர்.கே.நகர், விஓசி நகர், புதினா, பழைய வசாஹர்மென்பேட்டை, TH சாலை பகுதி, டோல்கேட் பகுதி, தொண்டியார்பேட்டை பகுதி, ஸ்டான்லி பகுதி, தொரப்பாடி பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள் ஆகியவற்றில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாம்பாக்கம் வலப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகள், நொளம்பூர், ஜே.ஜே.நகர் மேற்கு சின்ன நொளம்பூர், பெரிய நொளம்பூர், குருசாமி சாலை, TNHB கட்டம் I&II, யூனியன் சாலை, வானகரம் சாலை, VGN சாலை, 1 முதல் 8வது பிளாக், மீனாட்சி அவென்யூ, MCK லேஅவுட், MGR பல்கலைக்கழகம், பட சாலை தெரு, ஜெஸ்வந்த் நகர், சிற்றரசூர் முத்துகிருஷ்ணபுரம், ஆராய்ச்சிக்குப்பம், அருங்குணம், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், சிலம்பிநாதன்பேட்டை ஆகிய பகுதிகளிலும் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும், எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நாளை முதல் நான்கு நாட்களுக்கு சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மின்தடையும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...