சிலாபத்தில் மீட்கப்பட்ட சடலங்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!

Date:

சிலாபம் – சிங்ஹபுர பகுதியில் பதிவாகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர், மனைவி மற்றும் மகள் ஆகியோரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.

அதன்படி கணவரே தமது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு, தமக்குத் தாமே தீ வைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

சிலாபம் பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி ஐ.எம் இலங்கரத்ன இந்த பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

சிலாபம் – சிங்ஹபுர பகுதியில் தீக்கிரையான 2 மாடிகள் கொண்ட வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

குறித்த வீட்டில் வசித்து வந்த 51 வயதுடைய தந்தை, 44 வயதுடைய தாய் மற்றும் 15 வயதுடைய மகள் ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டிருந்தது.

தாய் கழுத்து அறுப்பட்ட நிலையிலும், தந்தையின் உடல் எரியுண்ட நிலையிலும், மகளின் உடலை இடிபாடுகளுக்குள் இருந்தும் காவல்துறையினர் மீட்டிருந்தனர்.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண், சிலாபம் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகஸ்தராகக் கடமையாற்றிவந்தவர் எனவும் அவரது கணவர் காணி விற்பனையில் ஈடுபட்டுவந்தவரெனவும் தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....