புலமைப்பரிசில் பரீட்சை மீதான மனுக்கள் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Date:

சமீபத்தில் நிறைவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் ஏற்கனவே கசிந்ததாகவும், எனவே குறித்த பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடுமாறு கோரி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நடவடிக்கைகள் இன்று (17) உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பமானது.

யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

இன்று மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை நிறைவு செய்திருந்தனர்.

நாளை (18) எதிர்தரப்பு சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை முன்வைக்க உள்ளனர்.

இதற்கிடையில், ஏதேனும் சமரசம் காணப்படுமாயின் நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு இரு தரப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....