கடந்த ஐந்து வருடங்களில் வீதி விபத்துக்களால் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி !

Date:

கடந்த 5 வருடங்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, 12 ஆயிரத்து 140 பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் 2,363 பேரும், 2021 ஆம் ஆண்டில் 2,557 பேரும், 2022 ஆம் ஆண்டில் 2, 540 பேரும் வீதி விபத்துக்களால் பலியாகியுள்ளனர்.

அத்துடன், 2023 ஆம் ஆண்டு 2,321 பேரும், கடந்த வருடத்தில் 2,359 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை இடம்பெற்ற பேருந்து விபத்துக்கள் தொடர்பிலும் காவல்துறையினர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி குறித்த காலப்பகுதியில் 198 பேருந்து விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 50 பேருந்துகளும், 148 தனியார் பேருந்துகளும் விபத்துக்குள்ளாகியுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....