‘மதராஸி’ என்று டைட்டில் வைத்தது ஏன்? – ஏ.ஆர். முருகதாஸ் தகவல்

Date:

தற்போது ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் ‘சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 23வது படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி இந்த படத்துக்கு ‘மதராஸி’ என்று டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். அது மட்டுமின்றி இப்படத்துக்கு அப்படி ஒரு டைட்டில் வைத்ததற்கு என்ன காரணம் என்பது குறித்தும் அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், ”இந்த ‘மதராஸி’ படம் ஆக்சன் கதையில் தயாராகி வருகிறது. குறிப்பாக அமரனுக்கு பிறகு இந்த படம் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் படமாக இருக்கும்.

வட இந்தியாவில் உள்ள மக்கள் தென்னிந்திய மக்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. அந்த வகையில், தென்னிந்திய மக்களை மதராஸி என்று தான் அவர்கள் அழைத்து வருகிறார்கள்.

அதன் காரணமாகவே இந்த படத்துக்கு மதராஸி என்று டைட்டில் வைத்திருக்கிறேன். இந்த படம் பார்க்கும்போது இந்த டைட்டில் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக அனைவரும் கூறுவார்கள்,” என்று தெரிவித்துள்ளார் ஏ. ஆர். முருகதாஸ்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....