பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்தார் போப் பிரான்சிஸ்

Date:

தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ், 88 ,பிப்ரவரி 14 அன்று ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் சுவாசக் கோளாறுகளுடன் அனுமதிக்கப்பட்டார், அவருக்க இரட்டை நிமோனியா என்று சொல்லப்பட்டது. இரு நுரையீரல்களிலும் கடுமையான தொற்றால் அவருக்கு சுவாசிக்க கடினமாக இருந்தது.

17வது நாளாக மருத்துவமனையில் நிமோனியாவால் போராடி வரும் போப் பிரான்சிசை இன்று இரண்டு வாடிகன் அதிகாரிகள் சந்தித்தனர். அவர்களிடம் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் போப் நன்றி தெரிவித்தார்.

போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி கூறியதாவது:

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸிற்கு ரத்த ஓட்டம் சீராக உள்ளது. வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையில் எந்த அதிகரிப்பும் இல்லை.

போப் இரவு நேரத்தை அமைதியாக கடந்துவிட்டார். சுவாச பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை.

போப் பிரான்சிஸ், ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம். அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் 3 வாரமாக வழிநடத்த முடியவில்லை. இந்த நிலையில் தான் இன்று வாடிகனில் 2வது அதிகாரியும், பரோலின் துணைவருமான கார்டினல் பியட்ரோ பரோலினை, மருத்துவமனையில் அவரை சந்தித்தனர். அப்போது அவர், உங்கள் அனைவரின் பாசத்தையும், நெருக்கத்தையும், நான் உணர்கிறேன். கடவுளின் அனைத்து மக்களாலும் ஆதரிக்கப்படுவது போல் உணர்கிறேன் என்று கூறியுள்ளார். இவ்வாறு மெட்டியோ புருனி கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....